அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Saturday 6 August 2011

வகை வகையாய் வைரஸ்கள்


1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA: இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.

3. BHO: இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4. BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6. BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7. ADWARE COOKIES:  பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.

7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.

8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.

9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.

10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.
உறவுகளின் சாம்ராஜ்யத்தில்
உணர்வுகளின் சிப்பாய்கள்
உரசிக்கொண்டால்..!!
பசப்பு மொழிகளில்
பாசத்தை அடகு வைத்து
பெற்ற உள்ளத்தை
எட்டி உதைக்கும்
உன் வார்த்தைகள்...
பெத்தவள்
மத்தவளாகும்போது
மொத்த உறவுகளையும்
நீ அறுத்துகொண்டு போகும்போது.....
வாழ்க்கையின் ஓடத்தில்
துடுப்பாய் இருந்தவர்கள்
காலத்தின் கோலத்தில்
காணாமல் போய்விடுகிறார்கள்
உண்மையை ஒழித்துகட்ட
ஊனமான காரணங்கள்...உன்
நாவின் நுனியில் நர்த்தனமாடும்..
நம்பிக்கை நாள் கேட்கும்
பெத்த இதயத்தை பிய்த்தெறிய..
வயிற்றில் சுமந்தவள்
உன் வயிற்றைப் பார்த்து
வாயடைத்து நிற்பாள்
அவள் தலைவனோ.....
தலைகவிழ தனிமையைத் தேடுவான்.

Tuesday 3 May 2011

இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்

கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி.  இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.


திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)


தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)


ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்


திரு. முத்து நெடுமாறன் 


தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர் 

திரு. மணவை முஸ்தபா

தமிழ் கணினி ஆய்வுகளில் இருக்கும் IISC பெங்களூரு பேராசிரியர்

திரு. ஏ.ஜி. ராமகிருஷ்ணன்

http://kanapraba.blogspot.com/2011/03/blog-post.html 

http://www.keetru.com/literature/essays/venkatraman.php 

இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?


Sunday 24 April 2011

இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?

,


ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும்.
ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,

எப்.டி.பீ க்ளையண்ட் கொண்டு டெக்ஸ்ட், படங்கள். வீடியோ, இசை என எவ்வகையான பைல்களையும் அப்லோட் செய்யலாம். இணைய தளமொன்றிற்கு பைல் ஒன்றை அப்லோட் செய்வதற்கு முன்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அல்லது உங்கள் இணைய தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடமிருந்து பின்வரும் விவரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.

பைல் ஒன்றைப் பதிவேற்றுவதற்கு முதலில் பைல்ஷிலா எப்.டி.பீ க்லையண்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு File மெனுவில் Site Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும் Site Manager விண்டோவில் New Site பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது அதன் மேற் பகுதியில் இணைய தளத்தின் பெயரை வழங்குவதற்கு ஏற்றவாறு கர்சர் தோன்றும். அங்கு அந்த தளத்திற்குரிய பொருத்தமான பெயரை வழங்குங்கள். இந்தப் பெயர் உங்கள் தளத்தை அடைவதற்கான இணைய தள முகவரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்து General டேபின் கீழ் Host எனுமிடத்தில் உங்கள் தளத்திறகான சேர்வர் முகவரியை டைப் செய்யுங்கள். உதாரணமாக ftp://ftp.example.com/. Server type எனுமிடத்தில் FTP தெரிவு செய்யுங்கள். . Port இல்க்கம் வழங்க வேண்டிய அவசியமில்லை

அடுத்து Logon type எனுமிடத்தில் ட்ரொப் டவுன் பட்டியலிலிருந்து Normal தெரிவு செய்யுங்கள். அப்போது User Name மற்றும் Password வழங்கக் கூடியதாக அந்த இடங்கள் மாறும். அவ்விடங்களில் உங்களுக்குத் தரப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்டை வழங்குங்கள்.

நீங்கள் வழங்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்கள் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். அதனால் நீங்கள் பைல் அப்லோட் செய்ய விரும்பும் ஒவ்வொரு தடவையும் இந்த விவரங்களை வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. .

எனினும் இணைய மையங்கள் (Internet café) போன்ற பொது இடங்களில் எப்.டிபீ க்லையண்டுகளைப் பயன் படுத்துவதானால் அப்லோட் செய்யும் பணி முடிந்ததுமே அந்த விவரங்களை அப்போதே கணினியிலிருந்து அகற்றி விட்டு வெளியேறுங்கள்.

அடுத்து உங்கள் சேர்வர் கணினியை அடைவதற்கு Connect பட்டனில் க்ளிக் செய்யுங்கள். சேர்வர் கணினியுடனான இணைப்பு வெற்றிகரமாக அமைந்தால் FileZilla விண்டோவின் வலப்புறம் உங்க்ள் தளத்திற்குரிய பைல் போல்டரகளைப் பட்டியலிடக் (Remote Site) காணலாம். அதேபோல் இடப்புற விண்டோவில் உங்கள் கணினியிலுள்ள (Local Site) பைல் போல்டர் மற்றும் ட்ரைவ்களக் காண்பிக்கும். இந்த இரண்டு விண்டோக்களும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போல் செயற்படும்.

உங்கள் இணைய தளத்தை ஹொஸ்ட் செய்யும் நிறுவனம் வெப் சேர்வரிலுள்ள www, public_html போன்ற எதேனுமொரு போல்டரை உங்களுக்குப் பரிந்துரைத்திருந்தால் அந்த உரிய போல்டரை வலப்புற விண்டோவில் காண்பிக்கும். அதன் மேல் இரட்டைக் க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து விண்டோவின் இடப்புற விண்டோவில் நீங்கள் அப்லோட் செய்ய விரும்பும் பைலை உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்..
பின்னர் அந்த பைலை ட்ரேக் எண்ட் ட்ரொப் (Drag & Drop) முறையில் இழுத்து வலப்புறம் உள்ள உரிய போல்டரில் போட்டு விடுங்கள். உடனடியாக அந்த பைல் அப்லோட் ஆக ஆரம்பிக்கும். . உங்கள் பைலை அப்லோட் ஆகும் செயற்பாட்டை பைல்ஷிலா விண்டோவின் கீழ்ப் பகுதியில் காண்பிக்கும். . அப்லோட் செயற்பாடு முடிந்தவுடன் சேர்வரிலிருந்து இணைப்பைத் துண்டித்து விடலாம். அதற்கு Server மெனுவிலிருந்து Disconnect தெரிவு செய்யுங்கள்.

ஒரு வேளை உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் எப்.டி.பீ கொண்டு அணுக விடாமல் த்டுத்திருந்தால் அப்லோட் செய்யும் பணிக்கு வெப் பிரவுஸரையே பயன் படுத்த வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இணைய தளங்களை நிர்வகிப்பதற்கான கண்ட்ரோல் பேனல் (Control Panel) எனும் வசதி ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும்.

Friday 22 April 2011

எந்த நாட்டில் எத்தனை மணி?


கடிகாரத்தில் தெரிவது ஹொங்கொங்கின் நேரம். இந்நேரம் எந்தெந்த நாட்டில் எத்தெத்தனை மணியாக இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

கீழே சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.

http://www.timeanddate.com/worldclock/full.html

"சட்டர்லைட்" ஊடாகவும் அறிந்துக்கொள்ளலாம்
குறிப்பிட்ட நாட்டின், குறிப்பிட்ட பிரதேசத்தின் மேல் சுட்டியை நகர்த்துவதன் மூலம், நாம் அறிய விரும்பும் பிரதேசத்தின் தற்போதைய நேரத்தைச் சரியாக அறிந்துக்கொள்ளலாம். அங்கே காணப்படும் Close Up எனும் சொற்களை அழுத்துவதன் மூலம் நாம் விரும்பும் பிரதேசத்தை அண்மித்து அதன் நேரத்தை அறிந்துக்கொள்ள கூடிய வசதியும் உள்ளது.

http://www.qlock.com/time/
உங்கள் IP இலக்கம்

உலகில் இருக்கும் எண்ணற்ற கணனிகளில் இருந்து ஒவ்வொரு கணனியையும் வேறுப்படுத்தி அறிந்துக்கொள்வதற்கு, இணைய இணைப்பை இணைத்தவுடன் சேவை வழங்கிகளால் ஒரு IP இணைய இலக்கம் வழங்கப்பட்டு அதினூடாகவே எமக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது.

அவ்வாறு நமக்கு வழங்கப்படும் இணைய இலக்கத்தை நாம் கீழே உள்ள தளங்களினூடாக அறிந்துக்கொள்ளலாம்.

http://whatismyip.com/

http://whatismyipaddress.com/

http://www.ipchicken.com/

ஒரு கணனியின் IP விலாசம் உட்பட ஊர் மற்றும் அதன் சேவை வழங்கிகளின் விபரங்களையும் அறியத்தரும் இணையத்தளங்கள்.

http://www.ip2location.com/

http://www.ip-adress.com/ipaddresstolocation/

http://www.geobytes.com/IpLocator.htm?GetLocation

ஒரு இணையத்தளத்தைப்பற்றிய விபரம்

ஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு அந்த இணையத்தளத்தின் பெயரை WHOIS Search பக்கம் ஆங்கிலத்தில் பிழையின்றி இட்டு Seacch எனும் அழுத்தியை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்டத் தளத்தின் முழுவிபரத்தையும் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.networksolutions.com/whois/index.jsp

IP இலக்கத்தை மறைப்பதற்கு

உங்கள் கணனியின் IP இலக்கத்தை அறிந்துக்கொண்டால் உங்கள் கணனியின் வழங்கி உற்பட உங்களது முழுவிபரத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஏன் உங்கள் வீட்டு விலாசத்தையே அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியானால் உங்கள் கணனியின் IP இலக்கத்தை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்க என்ன செய்யலாம்? இதோ இந்த இணையத்தளம் அதற்கான சேவையை வழங்குகின்றது.

http://www.ip-adress.com/hide_my_ip/

உங்கள் கணனியின் வேகம்
உங்கள் கணனியின் பதிவிறக்கம் Download செய்யும் வேகம்,
பதிவேற்றும் Upload வேகம் போன்றவற்றை அறிந்துக்கொள்ள உதவும் இணையத்தளம்.

http://www.ip-adress.com/speedtest/

வீடியோ கிளிப்புகள்

வீடியோ கிளிப்புக்களை பார்ப்பதற்கு யூ டியூப் மற்றும் ஈழம் வீடியோ போன்று வேறு சிலத் தளங்கள்.

http://www.dailymotion.com/

http://www.burlysports.com/play/channel/89196

நேரடி ஒலி ஒளி பரப்பு

நிகழ்வுகளை நேரடியாக உங்கள் அழைப்பேசியின் ஊடாகவே ஒலி ஒளி பரப்புச் செய்ய:

http://qik.com/

நேரடி கிரிக்கெட் நிகழ்ச்சிகள்

கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு. இங்கிருக்கும் சில மென்பொருற்களை பதிவிறக்கி பார்வையிடலாம்.

http://www.sopcast.com/

நேரடி சன் டீ வீ

Sun TV போன்ற சில தமிழ் தொலைக்காட்சி சேவைகளை நேரடியாகப் பார்வையிடக்கூடிய தளங்கள்.

http://www.vaanam.com/

http://www.isaitamil.net/ (இத்தளத்தில் பதிவு செய்து பார்க்கவேண்டும்)

ஞாபகப்படுத்தும் இணையத்தளம்

செய்யவேண்டி இருப்பவற்றை மறக்காமல் இருப்பதற்கு நினைவூட்டும் ஒரு இணையத்தளம்.

http://www.tadalist.com/

இன்றைய நாணயப் பெறுமதி

இன்றைய Currency Rate எவ்வளவு என்பதை துள்ளியமாக அறிந்துக்கொள்வதற்கு.

http://www.xe.com/

இலவச இணையத் தொலைப்பேசி

இலவசமான தொலைப்பேசி வசதிகளை ஏற்படுத்தித்தரும் இணையத்தளங்கள்.

http://www.cheapvoip.com/

http://www.voipcheap.com/en/index.html

http://www.myvoipprovider.com/blogcategory/Betamax/

http://www.softonic.com/

நாள்காட்டி
நாள்காட்டி இணையத்தளம். இந்த நாள்காட்டியில் இன்றைய நாளை சொடுக்கினால் இன்றைய நாளின் பிரசித்திப்பெற்ற நபர்களின் விபரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.

http://www.infoplease.com/calendar.php

தனிம வரிசை அட்டவணை

தனிம வரிசை அட்டவணைகளை பார்வையிடுவதற்கு.

http://www.shivamaha.com/chemistry/elements.htm

http://code.jalenack.com/periodic/

நச்சு நிறல்களின் பட்டியல் (வைரஸ்)

500.000 க்கும் மேற்பட்ட நமது கணனி பாவனையில் பாதிப்புக்களை உண்டு பன்னும் வைரஸ்களின் பெயர் விபரங்களையும் அதற்கான சிறந்த எண்டி வைரஸ்களையும் பற்றிய விபரங்களை தரும் இனையத்தளம்.

http://www.av-comparatives.org/

கணனி நோட்டம்

Firewall உடன் இணைக்கப்படாத ஒரு கணனியில் இருக்கும் தகவல்களை அறிய விரும்பினால் அக்கணனியின் IP Address சை மட்டும் அறிந்துக்கொண்டால் போதும். அதனை எடுத்துக்கொண்டு LAN card security scanner எனும் மென்பொருளை பதிவிறக்கி அதனுள் எங்களுக்கு தேவையான கணனியின் IP இலக்கத்தை இடுவதன் மூலம் அக்கணனியில் நடைப்பெறும் நிறையவே விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். அம்மென்பொருளிற்கான தளம்.

http://www.gif.com/

கணனி பாதுகாப்பு

இலவச மற்றும் வர்த்தக Firewall மென்பொருற்களை பதிவிறக்கி உங்கள் கணனிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு.

இதிலிருக்கும் இன்னொரு நன்மை என்னவன்றால் நமக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களை வடிக்கட்டி தானாகவே கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

http://www.zonealarm.com/store/content/home.jsp

http://www.zonealarm.com/store/content/catalog/catalog_main.jsp

எழுத்துருவாக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு

ஒவ்வொரு மொழியிலும் எத்தனையோ விதவிதமான எழுத்துருக்கள் உள்ளன. இப்படியான அழகிய எழுத்துருக்கள் பார்ப்பவரை கவரும் விதமாக இருக்கும். தமிழிலும் எத்தனையோ விதவிதமான அழகிய எழுத்துருக்களை காண்கின்றோம். உங்களுக்கும் அழகிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் ஆர்வம் இருக்குமாயின் நீங்களும் ஒரு முறை முயன்று பார்க்கலாம்.

http://www.myfirstfont.com/

அழகிய 124 விதமான தமிழ் எழுத்துருக்கள்
தமிழில் அழகழகான 124 தமிழ் எழுத்துருக்களை [Tamil Fonts] சிவம் என்பவர் வடிவமைத்துள்ளார். அவற்றை இத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.pcpages.com/sivam/index.html

Favlcon ஐகொன்
இன்று சில இணையத்தள உலாவிகளைப் பார்த்தீர்களானால்
உலாவியின் முகவரியுடன் ஒரு சிறிய ஐகொன் தென்படும். அதை ஆங்கிலத்தில் Favlcon Icon என்று அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால் உங்கள் இணைய முகவரியுடன் இந்த Favlcon ஐகொன் ஒன்றையும் நிறுவிக்கொள்ளமுடியும். இதோ அதற்கான தளங்கள்.

http://www.favicon.co.uk/

http://tools.dynamicdrive.com/favicon/

விமான நிலையங்கள் விபரம்

இலங்கை விமான சேவை கோட் என்றால் SL. ஹொங்கொங் விமான சேவை கோட் என்றால் HK என்பதுப்போல், ஒவ்வொரு நாட்டு விமான சேவைக்கும் விமான சேவை கோட், விமான நிலய கோட் மற்றும் வானூர்தி கோட் போன்றவை இருக்கும். இதை வைத்து ஒரு விமான சேவை மற்றும் அதன் விபரங்களை அறிந்துக்கொள்ளலாம். அவ்வாறு உலகில் உள்ள அனைத்து விமான நிலைய கோட் மற்றும் விபரங்களையும் இதோ இந்த தளத்தில் பார்வையிடலாம். அகரவரிசையில் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன.

http://www.world-airport-codes.com/alphabetical/country-name/a.html

இனியனின் எழுத்துப்பெயர்ப்பு செயலி

இந்திய மொழியில் அமைந்த ஒருங்குறி உரையை இடப்பக்க பெட்டியில் ஒட்டி 'மாற்று' எனும் பொத்தானை அழுத்தினால், அது எழுத்துப்பெயர்க்கப்பட்டு வலப்பக்க பெட்டியில் தமிழில் காட்டும் அருமையான செயலி

இக்செயலி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.

http://transliterator.blogspot.com/

இந்த எழுத்துப்பெயர்ப்புக் கருவியை உருவாக்கியவரின் கருத்துக்களை அறிய இங்கே அழுத்திப் பாருங்கள்.

போட்காஸ்ட் மற்றும் பாடல் கோப்புகளை வலையேற்றல்

பாடல்களை வலையேற்றவதற்கும் வலையேற்றிய பாடல்களை வலைப்பதிவுகளில் தவழ விடுவதற்கும் சிறந்த தளம்.

http://odeo.com/

லேனா தமிழ்வாணனின் மின்னூல்

லேனா தமிழ்வாணனின் "நீங்கள் ஓர் ஒரு நிமிட சாதனையாளர்" எனும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் பயனுள்ள ஆக்கங்களை கீழே சொடுக்கி பார்க்கலாம். இவை PDF கோப்புகளாக உள்ளன.

http://static.scribd.com/docs/3s74g6o8yhuio.pdf

ஒரே உலக நாணயம் Single Global Currency

அமெரிக்காவில் டொலர், ஐரோப்பாவில் யூரோ இலங்கையில் ரூபா என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாணயம் பயன்படுகின்றன. இந்நிலையை மாற்றி எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயத்தை உருவாக்குவது பல வழிகளில் நன்மை பயக்கும் என ஒரு இணையத்தளம் கூறுகிறது. Single Global Currency எனும் இந்தக் கொள்கையை 2025 க்குள் அமுல்படுத்துவது பற்றி அக்குழு ஆராய்ந்து வருகிறது. இது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதை பொருத்திருந்துத் தான் பார்க்கவேண்டும். மேலதிக விபரங்களை அத்தளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளுங்கள்.

http://www.singleglobalcurrency.org/

கோப்புகளை பதிவேற்றிவைப்பதற்கான தளங்கள்

எமது பத்திரக்கோவைகள், நிழல்படங்கள், ஒலிப்பதிவு போன்றவற்றை இந்த இணையத்தளங்களில் பதிவேற்றி வைத்துக்கொண்டால், நமக்கு தேவையான போது தேவையான இடத்தில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது இன்றைய இணைய பாவனையில் ஒரு இன்றியமையாத சேவையாகும். இந்த சேவையை வழங்கும் இணையத்தளங்கள். 5 GB வரையான இடத்தை இலவசமாகத் தருகின்றன.

குறிப்பு: Private, Public என்று போடப்பட்டுள்ள இடத்தில் உங்களது கோப்புகளை பிறர் பார்க்காமல் இருக்கவேண்டும் என்றால் Private எனும் இடத்தில் ஒரு சொடுக்குப் போட மறவாதீர்கள்.

http://www.rapidshare.de/

http://www.4shared.com/

வரையரையற்ற இடவசதியை தரும் ஒரு இணையத்தளம்.

http://www.uploading.com/

எக்ஸல் கடவுச்சொல்லை மறந்திவிட்டீர்களா?

எம் எஸ் எக்ஸல் சீட்டில் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? அப்படியானால் இந்த தளம் அக்கடவுச்சொல்லை நீக்கி உங்கள் கோப்புகளை பார்ப்பதற்கான வசதியை வழங்குகிறது. அதற்கான மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

http://www.straxx.com/excel/password.html

தவறுதலாக அழிப்பட்ட கோப்புகளை மீட்க
MP3, ஐபொட், டிஜிட்டல் கெமரா போன்றவற்றில் உள்ள கோப்புகள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டால், அவற்றை மீற்க இந்த மென்பொருளின் உதவியை நாடலாம்.

http://www.recuva.com/

குப்பைத்தொட்டியிலிருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு மீட்கலாம்?
உங்கள் கணனியில் இருக்கும் கோப்புகளை குப்பை தொட்டியிலிருந்தும் அழித்துவிட்டப் பிறகு, அக்கோப்புகளை எப்படி மீட்பது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த தளம் உங்களுக்கு கைகொடுக்கும்.

http://www.snapfiles.com/get/restoration.html

ஒரு கணனியின் செயல்பாடுகளை அவதானிக்க

ஒருவருடைய கணனியில் ஒரு நபர் என்னென்ன செய்கிறார்? என்னென்னெ தட்டச்சுகிறார்? என்று அனைத்து செயல்பாடுகளையும் அந்நபர் அறியாமலேயே அவதானிக்க விரும்புகின்றீர்களா? கீழ் உள்ள தளத்தில் இருக்கும் மென்பொருளை அக்கணனியில் நிறுவி விட்டீர்களானால் போதும், அக்கணனியில் நடைப்பெறும் ஒவ்வொரு அசைவுகளை மட்டுமல்ல அவர் தட்டச்சுப்பலகையில் தட்டும் ஒவ்வொரு எழுத்துக்களையும் கூட அவதானிக்கலாம்.

அதேவேளை வேறு யாரும் இது போன்ற ஒரு மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி உங்களை அவதானிக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நிறுவி விட்டால் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் உங்கள் கணனியிலிருந்தே மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் மிக அதிகமாகவே உள்ளன.

http://www.refog.com/keylogger/

http://www.revealerkeylogger.com/

யாழ் கருத்துக்களம் - தேவகுரு

கணனி திருத்துதல் (Trouble Shooting) தொடர்பான சிறப்பான விளக்கங்களை யாழ் கருத்துக்களத்தில் தேவகுரு என்பவர் வழங்கி வருகின்றார். இணையத்தில் வேறு எந்த தளத்திலும் காணப்படாக பயன்மிக்கத் தகவல்கள் அவை. (அவரது தகவல்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருவதால், நிகழ்காலத்துக்கு பயன்படக்கூடிய தகவல்களைத் தேடிப் பயன்பெறுங்கள்.)

அவரின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14994


 

மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ் அவர்கள்

பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52. உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.

வாழ்க்கை வரலாறு

பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.

பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்

பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.

இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.

இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

இதோ தளமுகவரி: http://www.gatesfoundation.org/Pages/home.aspx

இருவரும் இணைந்தே இந்நிறுவனத்தை நடாத்தி வருகின்றனர்.

இன்று நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் கைகளில் எல்லாம் கணனி தவழ்கின்றது என்றால் அதற்கான ஆரம்ப வித்திடவர் பில் கேட்ஸ் என்றே கூறவேண்டும். உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கணனி அறிமுகமாகியதன் பெரும் பங்கு பில் கேட்ஸையும் அவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தையுமே சாரும்.

நன்றி
arun

Wednesday 23 February 2011

கா.......கார்த்திக்........."


கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !


குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !


உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !


உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !


எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !


கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !


என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!


நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!
 
 

உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!
 

என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??

என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???

கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!

உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்...

இதை நீங்கள் 2 வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.



குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:
1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

*

2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.


*

3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

*

4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

*

5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

*

6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.


*

7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

*

8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

*

9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.


*

10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

*

11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

*

12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

*

13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

*

14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

15. * பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
* கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

*

16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு "ஹெவிநெஸ்' இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

* .

17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

*

20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*

22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.



மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.


***
நன்றி
azhkadalkalangiyam

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்...

இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
"நான் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுகிறேன்; ஆனாலும், எனக்கு ஏதாவது பிரச்னை வரத்தான் செய்கிறது' "நான் காய்கறி, பழங்கள் தான் அதிகம் சாப்பிடுகிறேன்; பால், தயிர் அதிகம் சேர்த்துக்கொள்கிறேன்; இருந்தாலும், ஏதாவது உடல் கோளாறு வந்து விடுகிறது!'





இப்படி , ஆரோக்கியமான உணவுகளை கடைபிடிக்கும் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்மை தான். ஆனால், அதற்கான காரணத்தை அறியமாட்டர். ஏதாவது வைட்டமின், டானிக், குறிப்பிட்ட கோளாறுக்கான மருந்து எடுத்துக்கொண்டால், ஆரோக்கிய உணவு பலனை தராது.

***


இதோ சில டிப்ஸ்கள்:


ஆன்டிபயாடிக்

வைரஸ் காய்ச்சல் உட்பட தொற்று நோய் வராமல் தடுக்க ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது, பால், யோகர்ட் போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக்குள் இந்த உணவுகள் போனால், வயிற்றில் உள்ள அமிலச்சத்துக்களை திறனற்று செய்து விடும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாமல் வீரியம் குறைந்து விடும். அப்புறம் என்ன...தொற்று நோய் கிருமிகள் அதிகரித்து விடும்.

***

வயிறு அப்செட்

திடீரென பேதி ஆகிறது; வயிற்றில் கடமுடா சத்தம்; எந்த வேலையும் செய்ய முடியவில்லை; வெளியேயும் போக முடியவில்லை. அப்போது பேதி மருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆன்டிபயாடிக் உட்பட வேறு மருந்துகளுடன் பேதி மருந்தை எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பேதியும் நீடிக்கும்.

பிளாக் டீ, பாலாடைக்கட்டி போன்ற சமாச்சாரங்களை அப்போது அறவே நீக்க வேண்டும். தானிய வகை பிரட், வெள்ளரிக்காய், சுவீட் ப்ளம் போன்ற காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

***

அலர்ஜி உண்டா

அலர்ஜியை போக்கும் மருந்து எடுத்துக்கொண்டால், ஒயின் குடிப்பது கூடாது; அதுபோல, சில வகை இறைச்சிகளை கைவிட வேண்டும். முட்டை, வாழைப்பழம், முள்ளங்கி போன்றவையும் ஒத்துக் கொள்ளாது.

குறிப்பாக, ப்ரோட்டீன் சத்துள்ள அசைவ உணவுவகைகள், அலர்ஜியை அதிகப்படுத்தும். அதனால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

***

தைராய்டு மருந்தா

நீங்கள் தைராய்டு மருந்து எடுத்துக்கொள்பவரா? அதை எப்போது எடுத்துக்கொள்கிறீர்கள்? காலையிலா , சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா? தைராய்டு மருந்து எடுத்துக்கொள்வோர், அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின் தான் சாப்பாடே சாப்பிட வேண்டும். காரணம், தைராய்டு மருந்து எடுத்துக்கொண்டு, உடனே சாப்பிட்டால், உடலில் ஜீரணம் நடக்காது. பிரச்னை தான் மிஞ்சும். மருந்து சாப்பிட ஏதுவான நேரம், தூங்கி எழுந்த காலைப்பொழுது தான். அப்படி சாப்பிட்டால், உணவு பாதிக்காது.

***

வலி நிவாரணியா

வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வோரெனில், நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஜீரணமாகாமல் மலச்சிக்கலில் விடும். வலி நிவாரணி மருந்துகள், நார்ச்சத்துள்ள உணவுகளின் சத்துக்களை பறித்துவிடும்; உடலுக்கு பலன் போய்ச்சேராது.


***

சுடு நீரில் மருந்து

எந்த ஒரு மாத்திரை, மருந்தையும் , தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும் என்றால், சுடுநீர் கூடவே கூடாது. சாதாரண தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும்; மருந்தை குடிக்க வேண்டும். சுடுநீரில் மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்தின் பலன் கிடைக்கவே கிடைக்காது. வெதுவெதுப்பான நீரைக் கூட, மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின் தான் அருந்தலாம்.

***

கலக்கி குடிப்பதா

மாத்திரை, மருந்தை சிலர் தண்ணீரில், உணவில் கலந்து சாப்பிடுவதுண்டு. இது தவறான வழி. டாக்டர் சொல்லாத நிலையில், இப்படி செய்யவேகூடாது; காரணம், மருந்தின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது தான்.

மாத்திரையை நான்கு துண்டாக்கி கூட விழுங்கலாம்; ஆனால், பால், காபியில் கலந்து குடிப்பதோ சரியல்ல.

***

வைட்டமின் "நோ'
ஏதாவது உடல் கோளாறு தீர மருந்து , மாத்திரை எடுத்து வரும் போது, அத்தோடு நீங்களே டாக்டராகி வைட்டமின் மாத்திரைகளை விழுங்கக்கூடாது. வைட்டமின் மாத்திரையும் பலன் தராது; கோளாறுக்காக விழுங்கிய மாத்திரைகளும் பலன் தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***
நன்றி தினமலர்
***

தேசிய பிராட்பேண்ட் திட்டம்

தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.
நகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.
நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.
தேடுதலுக்கான சுருக்கு வழிகள்:

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம்.  கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம். இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும். இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
கூகுள் தேடுதளம்:
1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா?  அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும். எடுத்துக்காட்டாக,  computer tips  தினமலர் தளத்தில் தேடிப் பெற வேண்டும் எனில்: computer tips site:www.dinamalar.com   என அமைக்கலாம். இதிலும் தினமலர் தளத்தில் கம்ப்யூட்டர் மலர் தளப்பக்கங்களில் மட்டும் எனில் computer tips site:www.dinamalar.com/computermalar  என அமைக்க வேண்டும்.
2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf  எனத் தர வேண்டும். இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல்  ps, doc, ppt, xls, rtf  ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.
3.முடிவுகளை விலக்க:  சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள். அப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad  என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com  என்றும் Apple -iPad -PDF   எனவும் பயன்படுத்தலாம்.
4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai]   என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai]  என டைப் செய்திடலாம்.
5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.  7 inches in cm மற்றும்  30 Euros in USD எனத் தரலாம்.
பிங் தேடுதளம்:
1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல  WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.
2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http:/// என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.
இதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.

Thursday 17 February 2011


ராசி பலன்


நல்லது செய், எல்லாமே நல்லபடியாக நடக்கும்.

மேஷ ராசி மக்களே!


நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு வித்துருங்க.


பரிகாரம்: 
தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.


ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி


சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.




பரிகாரம்: 
உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.



மிதுன ராசி மக்களே!
எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.



பரிகாரம்: 

ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்
       .

கடக ராசி மக்களே!

 சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.
பரிகாரம்:


டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால,
 உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!



சிம்ம ராசி மக்களே!
 குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால,
 இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன்,  ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!


பரிகாரம்:
 சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.




கன்னி ராசி மக்களே!

 ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.


பரிகாரம்: 
வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.




துலாம் ராசி மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எது சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்
வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.



விருச்சிக ராசி மக்களே! 

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: 
யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.



தனுசு ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2 இருந்தா 1க்கும், 1 இருந்தா 0க்கும், 0 இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற' ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்:

ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.
உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.

மகர ராசி மக்களே!
வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால,  இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: 
பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!


கும்ப ராசி மக்களே!

இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட படிக்கக்கூடாது.
பரிகாரம்:


அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.


மீன ராசி மக்களே!

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்:

 எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!