அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Wednesday 23 February 2011

கா.......கார்த்திக்........."


கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !


குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !


உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !


உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !


எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !


கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !


என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!


நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!
 
 

உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!
 

என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??

என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???

கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!

உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்...

இதை நீங்கள் 2 வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.



குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:
1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

*

2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.


*

3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

*

4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

*

5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

*

6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.


*

7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

*

8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

*

9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.


*

10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

*

11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

*

12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

*

13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

*

14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

15. * பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
* கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

*

16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு "ஹெவிநெஸ்' இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

* .

17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

*

20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*

22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.



மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.


***
நன்றி
azhkadalkalangiyam

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்...

இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
"நான் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுகிறேன்; ஆனாலும், எனக்கு ஏதாவது பிரச்னை வரத்தான் செய்கிறது' "நான் காய்கறி, பழங்கள் தான் அதிகம் சாப்பிடுகிறேன்; பால், தயிர் அதிகம் சேர்த்துக்கொள்கிறேன்; இருந்தாலும், ஏதாவது உடல் கோளாறு வந்து விடுகிறது!'





இப்படி , ஆரோக்கியமான உணவுகளை கடைபிடிக்கும் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்மை தான். ஆனால், அதற்கான காரணத்தை அறியமாட்டர். ஏதாவது வைட்டமின், டானிக், குறிப்பிட்ட கோளாறுக்கான மருந்து எடுத்துக்கொண்டால், ஆரோக்கிய உணவு பலனை தராது.

***


இதோ சில டிப்ஸ்கள்:


ஆன்டிபயாடிக்

வைரஸ் காய்ச்சல் உட்பட தொற்று நோய் வராமல் தடுக்க ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது, பால், யோகர்ட் போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக்குள் இந்த உணவுகள் போனால், வயிற்றில் உள்ள அமிலச்சத்துக்களை திறனற்று செய்து விடும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாமல் வீரியம் குறைந்து விடும். அப்புறம் என்ன...தொற்று நோய் கிருமிகள் அதிகரித்து விடும்.

***

வயிறு அப்செட்

திடீரென பேதி ஆகிறது; வயிற்றில் கடமுடா சத்தம்; எந்த வேலையும் செய்ய முடியவில்லை; வெளியேயும் போக முடியவில்லை. அப்போது பேதி மருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆன்டிபயாடிக் உட்பட வேறு மருந்துகளுடன் பேதி மருந்தை எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பேதியும் நீடிக்கும்.

பிளாக் டீ, பாலாடைக்கட்டி போன்ற சமாச்சாரங்களை அப்போது அறவே நீக்க வேண்டும். தானிய வகை பிரட், வெள்ளரிக்காய், சுவீட் ப்ளம் போன்ற காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

***

அலர்ஜி உண்டா

அலர்ஜியை போக்கும் மருந்து எடுத்துக்கொண்டால், ஒயின் குடிப்பது கூடாது; அதுபோல, சில வகை இறைச்சிகளை கைவிட வேண்டும். முட்டை, வாழைப்பழம், முள்ளங்கி போன்றவையும் ஒத்துக் கொள்ளாது.

குறிப்பாக, ப்ரோட்டீன் சத்துள்ள அசைவ உணவுவகைகள், அலர்ஜியை அதிகப்படுத்தும். அதனால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

***

தைராய்டு மருந்தா

நீங்கள் தைராய்டு மருந்து எடுத்துக்கொள்பவரா? அதை எப்போது எடுத்துக்கொள்கிறீர்கள்? காலையிலா , சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா? தைராய்டு மருந்து எடுத்துக்கொள்வோர், அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின் தான் சாப்பாடே சாப்பிட வேண்டும். காரணம், தைராய்டு மருந்து எடுத்துக்கொண்டு, உடனே சாப்பிட்டால், உடலில் ஜீரணம் நடக்காது. பிரச்னை தான் மிஞ்சும். மருந்து சாப்பிட ஏதுவான நேரம், தூங்கி எழுந்த காலைப்பொழுது தான். அப்படி சாப்பிட்டால், உணவு பாதிக்காது.

***

வலி நிவாரணியா

வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வோரெனில், நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஜீரணமாகாமல் மலச்சிக்கலில் விடும். வலி நிவாரணி மருந்துகள், நார்ச்சத்துள்ள உணவுகளின் சத்துக்களை பறித்துவிடும்; உடலுக்கு பலன் போய்ச்சேராது.


***

சுடு நீரில் மருந்து

எந்த ஒரு மாத்திரை, மருந்தையும் , தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும் என்றால், சுடுநீர் கூடவே கூடாது. சாதாரண தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும்; மருந்தை குடிக்க வேண்டும். சுடுநீரில் மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்தின் பலன் கிடைக்கவே கிடைக்காது. வெதுவெதுப்பான நீரைக் கூட, மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின் தான் அருந்தலாம்.

***

கலக்கி குடிப்பதா

மாத்திரை, மருந்தை சிலர் தண்ணீரில், உணவில் கலந்து சாப்பிடுவதுண்டு. இது தவறான வழி. டாக்டர் சொல்லாத நிலையில், இப்படி செய்யவேகூடாது; காரணம், மருந்தின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது தான்.

மாத்திரையை நான்கு துண்டாக்கி கூட விழுங்கலாம்; ஆனால், பால், காபியில் கலந்து குடிப்பதோ சரியல்ல.

***

வைட்டமின் "நோ'
ஏதாவது உடல் கோளாறு தீர மருந்து , மாத்திரை எடுத்து வரும் போது, அத்தோடு நீங்களே டாக்டராகி வைட்டமின் மாத்திரைகளை விழுங்கக்கூடாது. வைட்டமின் மாத்திரையும் பலன் தராது; கோளாறுக்காக விழுங்கிய மாத்திரைகளும் பலன் தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***
நன்றி தினமலர்
***

தேசிய பிராட்பேண்ட் திட்டம்

தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.
நகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.
நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.
தேடுதலுக்கான சுருக்கு வழிகள்:

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம்.  கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம். இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும். இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
கூகுள் தேடுதளம்:
1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா?  அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும். எடுத்துக்காட்டாக,  computer tips  தினமலர் தளத்தில் தேடிப் பெற வேண்டும் எனில்: computer tips site:www.dinamalar.com   என அமைக்கலாம். இதிலும் தினமலர் தளத்தில் கம்ப்யூட்டர் மலர் தளப்பக்கங்களில் மட்டும் எனில் computer tips site:www.dinamalar.com/computermalar  என அமைக்க வேண்டும்.
2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf  எனத் தர வேண்டும். இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல்  ps, doc, ppt, xls, rtf  ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.
3.முடிவுகளை விலக்க:  சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள். அப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad  என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com  என்றும் Apple -iPad -PDF   எனவும் பயன்படுத்தலாம்.
4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai]   என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai]  என டைப் செய்திடலாம்.
5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.  7 inches in cm மற்றும்  30 Euros in USD எனத் தரலாம்.
பிங் தேடுதளம்:
1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல  WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.
2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http:/// என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.
இதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.

Thursday 17 February 2011


ராசி பலன்


நல்லது செய், எல்லாமே நல்லபடியாக நடக்கும்.

மேஷ ராசி மக்களே!


நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு வித்துருங்க.


பரிகாரம்: 
தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.


ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி


சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.




பரிகாரம்: 
உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.



மிதுன ராசி மக்களே!
எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.



பரிகாரம்: 

ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்
       .

கடக ராசி மக்களே!

 சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.
பரிகாரம்:


டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால,
 உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!



சிம்ம ராசி மக்களே!
 குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால,
 இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன்,  ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!


பரிகாரம்:
 சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.




கன்னி ராசி மக்களே!

 ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.


பரிகாரம்: 
வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.




துலாம் ராசி மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எது சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்
வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.



விருச்சிக ராசி மக்களே! 

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: 
யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.



தனுசு ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2 இருந்தா 1க்கும், 1 இருந்தா 0க்கும், 0 இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற' ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்:

ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.
உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.

மகர ராசி மக்களே!
வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால,  இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: 
பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!


கும்ப ராசி மக்களே!

இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட படிக்கக்கூடாது.
பரிகாரம்:


அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.


மீன ராசி மக்களே!

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்:

 எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்!

சுஜாதாவின் நினைவாக அனைவருக்கும். காப்புரிமை இருப்பவர்கள் தெரிவிக்கவும். நீக்கிவிடுகிறேன். இனி, கட்டுரை.
வயது வந்தவர்களுக்கு ! 
உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட்தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் கலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ள்ஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவின விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளஞ்யே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமைஎன்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம்தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸ்னஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச்சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜால் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
You might also like:

தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்

ஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

3G என்றால் என்ன?

3rd Generation என்பதன் சுருக்கமே 3G ஆகும். மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் எனத்தமிழில் சொல்லப்படும் இச்சேவையின் மூலம் அதிவேக இண்டர்நெட், மொபைல் டிவி, மொபைல் இண்டர்நெட், விடியோ அழைப்பு (Video calling) போன்றவற்றை அனுபவிக்கலாம்.

BSNL நிறுவனம் தான் இந்தியாவில் முதன் முதலில் சென்ற வருடத்தின் பாதிக்கு மேல் அறிமுகப்படுத்தியது. மற்ற நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு முன்பே வளர்ச்சியடைய வேண்டும் என்ற கொள்கையில் தான் மற்ற நிறுவனங்களின் அறிமுகம் தாமதமாயின.

3G எப்படிப்பெறுவது?

நாம் 3G இணைய சேவையை அனுபவிக்க இரண்டு வழிகள் உள்ளன.இதை
வாங்குவதற்கு ஒரு புகைப்படமும் இருப்பிட சான்றிதழும் தேவை.

1. 3G வசதியுடைய செல்பேசிகள் (3G supported Mobiles)

BSNL, Tata Docoma, Reliance போன்ற நிறுவனங்களின் 3G சிம்கார்டை வாங்கி நமது மொபைல் போனில் போட்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் மொபைல் 3G வசதி இருக்க வேண்டும். BSNL நிறுவனம் 180 ருபாய்க்கு 3G சிம்களை வழங்கி வருகிறது.

2. 3G டேட்டா கார்டுகள் (Data cards)

இரண்டாவதாக கணிணியில் பயன்படுத்திக்கொள்ள பென் டிரைவைப்போல இருக்கும் 3G டேட்டா கார்டுகளை வாங்கிப்பயன்படுத்தலாம். இதில் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரிபெய்டு இரண்டு சேவையும் உள்ளது. பிரிபெய்டு வாங்கினால் நமது தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து பயன்படுத்த்லாம். காசில்லை என்றால் சும்மாயிருக்கலாம்.

3G Data cards and internet tarrifs
இவைகள் 3G டவர் இருக்குமிடத்தில் 3G சேவையாகவும் இல்லாத இடத்தில் சாதாரணமான 2G சேவையாகவும் செயல்படும். BSNL டேட்டாகார்டின் விலை 3000 எனவும் Reliance டேட்டாகார்டின் விலை 2600 க்கும் கிடைக்கிறது. இவற்றின் வேகம் 3.6 Mbps வரையுள்ளது எனச் சொல்லப்படுகிறது. Tata Docomo நிறுவனத்தின் டேட்டாகார்டு விலை தெரியவில்லை. மேலும் இதன் மென்பொருளிலிருந்தே நாம் தொலைபேசி அழைப்புகளும் sms அனுப்பும் செயலையும் மேற்கொள்ளலாம்.

ரீசார்ஜ் கட்டண விவரங்கள்
1.BSNL 3G Data card Tarrifs

Rs.275 – 500 MB ( 30 days)
Rs.440 – 1 GB (30 days)
Rs.606 – 1 GB day + 5 GB in night ( 30 days)
Rs.716 – 2 GB (30 days)
Rs.1102 - 10 GB (30 days)
Rs.1499 – Unlimited ( 30 days)
More details

2.Reliance 3G Data card Tarrifs
Rs.100 – 100 MB ( 30 days)
Rs.199 – 250 MB (30 days)
Rs.399 – 500 MB (30 days)
Rs.649 – 1 GB (30 days)
Rs.899 – 3GB (30 days)
Rs.1499 – 10 GB (30 days)
Rs.2599 – Unlimited (30 days)
More details

3. Tata Docomo 3G Data card Tarrifs
Rs.500 – 650 MB ( 30 days)
Rs.751 – 2 GB (30 days)
Rs.1001 -5 GB (30 days) + Virtually Unlimited (After 5GB speed upto 128 kb/s and after 15GB speed upto 10 kb/s)
Rs.1250 – 10 GB (30 days) +Virtually Unlimited (After 10GB speed upto 128 kb/s and after 20GB speed upto 10 kb/s)
More details

நான் மேற்கண்ட Bsnl மற்றும் Reliance நிறுவனத்தின் 3G சேவையை உபயோகப்படுத்திப்பார்த்தேன். Bsnl ன் சேவையில் டவுன்லோடு மற்றும் அப்லோடு விகிதமும் வேகமாக இருந்தது. Reliance ம் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களில் இவற்றின் போட்டியால் டேட்டாகார்டுகளின் விலையும் கட்டணங்களும் குறையும் என நினைக்கிறேன். மேலும் Vodafone, MTS போன்ற நிறுவனங்களும் டேட்டா கார்டுகளை வழங்கிவருகின்றன. இவை இன்னும் பரவலாக நாளாகலாம்.


இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

 

உத்திரப் பிரதேசம்
> மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்.

அருணாச்சலப்பிரதேசம்
> வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம்.

அசாம்
> இந்தியாவின் தேயிலைத் தோட்டம்.

ஆந்திரப் பிரதேசம்
> புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்.
> முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

கர்நாடகம்
> நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
> காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது.
> சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.

குஜராத்
> மிக நீளமான கடற்கரை அமைந்துள்ள மாநிலம்.

கேரளம்
> இந்தியாவின் நறுமனத் தோட்டம்.
> ரப்பர் உற்பத்தியில் முன்னனி மாநிலம்.

கோவா
> இந்தியாவின் சிரிய மாநிலம்.

நாகாலாந்து
> ஆங்கிலம் அதிகாரப் பூர்வ மொழியாக கொண்டுள்ள மாநிலம்.

பஞ்சாப்
> இந்தியாவின் தானியக் களஞ்சியம்.

மேற்கு வங்காளம்
> இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் ஒடிய மாநிலம்.

ஜம்மு & காஷ்மீர்
> இரு தலைநகரம் அமைதுள்ள ஒரே இந்திய மாநிலம்.


Get General Knowledge and current Affairs Alerts on your mobile. To Join sms ON SINDHIKKALAM and send it to 09870807070. No daily, Monthly, and Hidden charges. Its totally FREE!!!

தூசி தட்டப்பட்ட மனது - சிறு கதை

 

என்னப்பா எல்லாம் சுத்தமா க்ளீன் பண்ணியாச்சா?
”ஆச்சு சார்... ரெண்டு ஆள் வேலை.. நான் ஒருத்தனே பார்த்துட்டேன்”
”வேலையே இல்லன்னாலும் இப்படித்தான் சொல்லுவீங்க. ஒரு நிமிஷம் நில்லு”, அவனை காக்க வைத்துவிட்டு, வீடு முழுக்க வலம் வந்தேன்.
 
குறிப்பாக எனது படுக்கை அறை. மேசையில் நான்கு 100 ரூபாய் தாள்கள் இருந்தன. திடீரென சின்ன சந்தேகம், 500 ரூபாய் வைத்திருந்தேனா, 400 ரூபாய் வைத்திருந்தேனா..? 100 ரூபாயை எடுத்திருப்பானோ.. புதிதாக முளைத்த சந்தேகத்துடன் வெளியே வந்தேன்.
 
 
”சார் ரெண்டு பஸ் பிடிச்சு பெரம்பூர் போகணும்”
”இருப்பா அவசரப்படுத்தினா எப்படி.. இந்தா”, கொடுக்கும்போது வேண்டும் என்றே 100 ரூபாயை பிடித்துக் கொண்டு கொடுத்தேன்.
 
”ரொம்ப தாங்ஸ் சார்... ”,என்றவன் எண்ணிப் பார்த்துவிட்டு, ”சார் 100 ரூபாய் குறையுது சார்”, என்றான்.
 
”குறையுதா..”, என்றபடி போலி ஆச்சரியம் காட்டி, ”கரெக்டா எண்ணி வைச்சேனே..எப்படி குறையும்?”, என்றபடியே அவன் முகத்தை கவனித்தேன்.
 
”நல்லா தேடிப் பாருங்க சார்.. பாக்கெட் உள்ளேயே இருக்கும்”
”நான் பாக்கெட்லயே வைக்கலயே.. உள்ள டேபிள்லதான் வைச்சிருந்தேன்”
”டேபிள்லயா?” சட்டென அவன் குரலில் ஒரு பதற்றம் தொற்றியது.
”ஆமாம்.. நீ பணத்தை பார்த்தியா?”, அவன் திருடியிருப்பான் என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டேன்.
”பார்த்தேன் சார்.. ஆனா எவ்வளவு ரூபா இருந்ததுன்னு தெரியாது சார்.. ”
”நிஜமா உனக்கு எவ்வளவு இருந்ததுன்னு தெரியாது..?”
”நெசமாவே தெரியாது சார்..ஆனா..”
”என்ன ஆனா..”
”அது வந்து ...”, என்றபடி தலையை சொறிந்தான்.
”என்னப்பா தலையை சொறியற? ஏதாவது தப்பு செய்துட்டியா?”, என் குரலில் கடுமை ஏறியது.
”ஆமா சார்.. தப்புதான் செய்துட்டேன் சார்.”
 
சுள்ளென்று கோபம் தலைக்கு ஏற, போலீசுக்கு போன் போட்டுவிடலாமா என்று கை பரபரத்தது. பொறு பொறு என்று என்னை நானே அடக்கிக் கொண்டேன்.
”என்னை தப்பா நினைக்காதீங்க சார். டேபிள்ல அந்த பணத்துக்குப் பக்கத்துல ஒரு பைபிள் இருந்தது சார். புதுசா ஜிப் எல்லாம் போட்டு ரொம்ப அழகா இருந்தது. உங்கள கேட்காமலேயே ஒரு தடவை அதை எடுத்து வாசிச்சுட்டேன்.”
 
எதிர்பாராத இந்த பதிலால், ஒரே வினாடியில் கோபம் என்னவென்று தெரியாத ஒரு உணர்வாக மாறியது.
 
”சார் நீங்க எனக்கு மீதி 100 ரூபாய் தர வேண்டாம் சார். அதுக்குப் பதிலாக அந்த பைபிளை தருவீங்களா சார்”
அவன் குரலில் இருந்த பணிவும், நேர்மையும், மளுக் என்று என் கண்களில் கண்ணீர் வரவைத்தது.
”சே... இவனைப் போய் சந்தேகப் பட்டுவிட்டோமே..”
 
என் கண்ணீரை அவன் கவனிப்பதற்குள், மளமளவென்று உள்ளே சென்று பைபிளுடன் திரும்பி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் திருநாளில் ஒரு நண்பர் பரிசளித்த பைபிள் அது. நான் கிறித்தவனாக இல்லாவிட்டாலும், பைபிளை வாசிப்பேனாக்கும் என்று ஜம்பமாக வாங்கி வைத்த பைபிள். கடவுளின் வார்த்தைகளை எல்லோராலும் வாசித்துவிட முடியாது என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்தது. இந்த பைபிள் என்னிடம் இருப்பதை விட அவனிடம் இருப்பதே நியாயம் என்று தோன்றியது.
 
”இந்தாப்பா.. நீ விரும்பிக் கேட்ட பைபிள்”
”ரொம்ப தாங்ஸ் சார்”, என்றபடி பைபிளை திறந்து பார்த்துவிட்டு, ”சார் இதுக்குள்ள 400 ரூபாய்  இருக்கு சார்” என்றான்.
”வைச்சுக்கோப்பா, நான் தான் வைச்சேன். அது உனக்குத்தான். உன்னுடைய வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால நீ கேட்டதுக்கும் மேல தரணும்னு ஆசைப்படறேன்” என்றேன்.
”அடடா... எனக்கு வேண்டாம் சார். வேணாம்னு சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க சார். எனக்கு என் கூலியை கொடுங்க சார் அது போதும்”, என்றபடி மீதி 100 ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டான்.
 
”நான் கேட்டவுடனே இந்த பைபிளை குடுத்துட்டீங்களே.. பெரிய மனசு சார் உங்களுக்கு. ரெண்டு நாளாவே இந்த மாதிரி ஜிப் வைச்ச பைபிள் கிடைச்சா நல்லா இருக்கும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். கர்த்தர் உங்க மூலமா எனக்கு கொடுத்துட்டார். நீங்க நல்லா இருக்கணும் சார்.”
 
இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்.
யோவான் - 11வது அதிகாரம்.
 
பைபிளில் இருந்து அவன் வாசித்து முடிக்கும்போது, அவன் எனக்குள் இருக்கும் மனிதனையும், நான் அவனுக்குள் இருக்கும் மனிதனையும் உணர்ந்து, இருவருமே நெகிழ்ந்து போயிருந்தோம்

Wednesday 16 February 2011

ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் !!??

 

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது.


ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக் காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள் சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.

முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது..

ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"

ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின் வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.

வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன் பறந்தான்.

அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம் கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும் ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ / இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.

ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை கொண்டிருக்கும்.

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

 
 
இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில்  IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும்.  நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.  

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல். 
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது. 

உக்கார்ந்து யோசிப்பாங்களோ...!!

மனிதனின் கற்பனைக்கு எல்லையேயில்லை என பறைசாற்றுகிறது இந்தமாறுபட்ட சிலைகளின் தொகுப்பு.









நன்றி

உலகின் பிரும்மாண்ட வைரச் சுரங்கம்

சைபீரிய நாட்டின் கிழக்குப்பகுதியில்(Mirny) அமைந்துள்ள இந்த வைரச் சுரங்கம்தான் உலகின் மிகப்பெரிய திறந்தவெளிச் சுரங்கமாகும்.
கீழ் நோக்கி வீசும் காற்றின் வேகத்தால் சுரங்கத்தின் மேல் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
500 மீ அகலமும் 1200 மீ ஆழமும் கொண்டது. (அவ்வளவு ஆழத்துக்கு தோண்டியும் தண்ணி வரலையா?)

இன்னும் உணர முடியவில்லையெனில் கீழுள்ள படத்தை (சிவப்பு குறியிட்ட இடம்). 220 டன் மற்றும் 20 அடி உயரம் கொண்ட பாறைகளை ஏற்றிச் செல்லும் பெரிய சரக்கு வாகனம் எள்ளலவாய் தெரிவதைப் பாருங்கள். (அப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே!).