கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !
குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !
உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !
உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !
உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !
எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !
கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !
என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!
நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !
ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!
உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!
No comments:
Post a Comment